இலக்குப்பந்து விளையாட்டுப் போட்டி

7வது தேசிய அளவிலான இலக்குப்பந்து விளையாட்டுப் போட்டியானது பீகாரில் நடக்க இருக்கிறது.
அதில் தமிழ்நாடு அணிக்காக 24 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் அவர்களுக்கான
“சிறப்பு பயிற்சி முகமானது தமிழ்நாடு இலக்குப்பந்து கழகத்துடைய பொதுச் செயலாளர் முனைவர். ஜமால் ஷரிப் க பா அவர்களது ஆலோசனையின்படி கழகத்தின் துணைத் தலைவர் பி.ராஜசேர் தொழில்நுட்ப தலைவர் கழக பயிற்சியாளர்
செ.கலைமுருகன் மற்றும் கழக நிர்வாக தலைவர் தே.கபிலன்ராஜ் அவர்களின் குழுவானது செயல்பட்டு பயிற்சி முகாம் ஆனது அன்சால்தோ உயர்நிலைப் பள்ளி தாழம்பூர் நாவலூர் சென்னையில். 05.03.2021 முதல் தொடங்கி. 09.03.2021 வரை சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த சிறப்பு முகாம் பயிற்சி முடிவில் வீரர் வீராங்கனைகளுக்கு நிருபர் அலோடி லீனா மற்றும் முதல்வர் அரோகோகியாமரி நாத்தியா இலக்குப்பந்து வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
சென்னை விமான நிலையத்திலிருந்து 09.03.2021 இன்று புறப்பட்ட அணியின் மேலாளர்களாக முனைவர்.அருண்பிரசன்னா மற்றும் திருமதி. சூரியா அவர்களின் தலைமையில் அணியானது செல்கிறது. அனைத்து வீரர்களுக்கும் இலகுப்பந்து கழகத்தின் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

செய்தியாளர். சி.கவியரசு

Leave a Reply

Your email address will not be published.