பஞ்சாப் முதல்வர் பதவி யாருக்கு ?

நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிகாரத்தை இழந்த பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இப்போது பஞ்சாப்பில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் ஆட்சியை இழந்த பிறகு, பஞ்சாப் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பஞ்சாப் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ஏற்றுக்கொள்வாரா? என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் வேகமாகப் பரவி வரும் கேள்விகள். இப்படி கேள்விகள் எழக் காரணம், டெல்லியில் பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் கெஜ்ரிவால் சந்திக்கவிருக்கும் கூட்டமே. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை, பஞ்சாப் எம்எல்ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.