அதிமுக கண்டனம்

அரசியல் லாபத்துக்காக ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார் அண்ணாமலை:

ஜெயலலிதாவை மதவாதத் தலைவர் போல் சித்தரித்து அண்ணாமலை அவதூறு பரப்புவதாக அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜெயலலிதா ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ் நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ் நாட்டை அமைதிப் பூங்காவாக திகழச் செய்தவர் ஜெயலலிதா.

Leave a Reply

Your email address will not be published.