ஆம்ஆத்மிகட்சி போராட்டம்! 9/1/2021 மாலை 3 மணி


பல வருடங்களாக பணியாற்றி வரும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரி
நெய்வேலி அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்தும்!

நீண்ட காலமாக தடைப்பட்டு நிற்கும் துறைமுகம் -மதுரவாயல் பறக்கும் பாலம் கட்டும் பணிகளை தாமதிக்காமல் உடனே துவக்கிட கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.வசீகரன் தலைமையில் ஆம்ஆத்மிகட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாநில நிர்வாகிகள்: துணை தலைவர் டாக்டர் தாமோதரன், பொதுச்செயலாளர் திரு.ஜோசப் ராஜா, பொருளாளர் திரு.சீனிவாசன், முதன்மை செய்தி தொடர்பாளர் திரு.லெனின், மகளிரணி செயலாளர் திருமதி.ஸ்டெல்லா, மாநில குழு உறுப்பினர் திரு.கந்தசாமி. வழக்கறிஞர் பிரிவு தலைவர் திரு.வேல்முருகன், திரு.R.M.சுவாமி ஒருங்கிணைப்பாளர் AAP-SVS தொழிலாளர் பிரிவு, செய்தி தொடர்பாளர் திரு.துறைமுகம் காஜா, செயலாளர் கலை & கலாச்சார பிரிவு திரு. ராம்குமார், வர்த்தக அணி செயலாளர் திரு. ஜாகிர்உசேன்.
மாவட்ட, சட்டமன்ற நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியினர் அனைவரும் தவறாது பங்கேற்று மக்கள் நலனுக்கான இந்த நிகழ்வை வெற்றி பெற செய்திட அன்போடு வேண்டுகிறேன்
நாள்:9/1/2021
மாலை 3 மணி
இடம:
அம்பேத்கார் சிலை அருகில், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில்,
100 அடி சாலை. சென்னை.

இங்கனம்
என்றும் கட்சி பணியில் உங்கள்
ஜோசப் ராஜா
மாநில பொதுச் செயலாளர் ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published.