திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..

மணப்பாறை பெரியார் சிலை அருகே அதிமுகவின் எடப்பாடி கே.பழனிசாமி அணியினர் ஆளும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வு,பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுகளை கண்டித்தும்,தமிழகத்தில் அரங்கேறும் கொலை,கொள்ளை,வழிப்பறி,பாலியல் வன்கொடுமைகள்,போதை பொருட்கள்,ரவுடிகள் அராஜகம் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னச்சாமி மற்றும் சந்திரசேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ராமன், எத்திராஜ், கௌசிக், உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.இதில் 200க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
P.பாலு மணப்பாறை செய்தியாளர்.

Leave a Reply

Your email address will not be published.