இலங்கைக்கு இந்தியா உதவி!

இந்தியா, இலங்கைக்கு 11 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதன்படி பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இன்று இலங்கையில் சிங்கள புத்தாண்டும் நாளை தமிழ் புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்தியாவின், 11ஆயிரம் டன் அரிசியை ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. கடந்த வாரம் இந்தியா இலங்கைக்கு, 16ஆயிரம் டன் அரிசி அனுப்பியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Leave a Reply

Your email address will not be published.