உலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்!!

அத்திப்பழத்தில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்பியுள்ளது.

இதனை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

  • அத்திப்பழத்தில் இயற்கையாகவே மலமிளக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
  • விட்டமின் ஈ மற்றும் சி அதிகம் உள்ளதால், உடலினுள் சென்றதும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட ஆரம்பிக்கும். இதானால் ரத்த ஓட்டம் சீரடைந்து இதய நோய் வரவிடாமல் தடுக்கும்.
  • பாஸ்பரஸ், விட்டமின் டி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் எலும்புகளை வலிமைப்படுத்தும். இதனை இரவில் படுக்கும் போது நீரில் 2-3 துண்டுகள் அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து தொடர்ந்து உண்டு வந்தால் பலனடையலாம்.
  • தற்போது பெண்களிடையே மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகம் உள்ளது. குறிப்பாக மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்ட பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அத்தருணத்தில் பெண்கள் நீரில் ஊற வைத்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் அபாயமும் குறையும்.
  • நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இப்பழத்தால் உடல் எடையை எளிமையான முறையில் குறைக்க முடியும். இதோடு அடிக்கடி பசி எடுப்பதையும் கட்டுப்படுத்தும். இதில் உள்ள கனிமச்சத்துக்களான ஜிங்க், மாங்கனீசு, மக்னீசியம் போன்றவை பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
  • பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், நீரில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட, நல்ல பலன் கிடைக்கும்.
  • அத்திப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஏராளமாக நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்ள இன்சுலின் வெளியீட்டின் அளவு நடுநிலைப்படுத்தபடுவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.
  • தினமும் சாப்பிட்டு வர இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதோடு, கண்பார்வைக்கு, தொண்டை புண்ணிற்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.