அல்கொய்தா தலைவருக்கு ஹிஜாப் மாணவியின் தந்தை ‘குட்டு’!!

பெங்களூரு : கல்லுாரியில் ‘அல்லாஹு அக்பர்’ என கோஷமிட்ட மாணவியை புகழ்ந்து, சர்வதேச பயங்கரவாதியான அல்கொய்தா தலைவர் அம்மான் அல் ஜவாஹிரி ‘வீடியோ’ வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த மாணவியின் தந்தை, ‛இங்குள்ள ஹிந்துக்களும், நாங்களும், சகோதரர்கள் போல வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு யாருடைய ஆதரவும் வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பிப்ரவரியில் முஸ்லிம் பெண்கள் தலை மற்றும் முகத்தை மூடி அணியும் உடையான ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்தது. பிப்ரவரி 8ல் மாண்டியாவில் உள்ள பி.இ.எஸ்., கல்லுாரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவி முஸ்கானை பார்த்து, ஹிந்து மாணவர்கள் சிலர், ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷம் எழுப்பினர். இவர்களுக்கு போட்டியாக முஸ்கான், ‘அல்லாஹு அக்பர்’ என கோஷம் எழுப்பினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.

Leave a Reply

Your email address will not be published.