சென்னை மாநகராட்சி அதிரடி…

பெருநகர சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை :

திருவல்லிக்கேணி, ஆதம் மார்க்கெட், முக்தர் நிசா பேகம் தெருவில் மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக தேவையற்று பொருட்களை ஆமினா மளிகை ஸ்டோர் வெளியே வைத்து தெரு முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர்.

இதனால் பொது மக்கள் தங்கள் வாகனத்தில் செல்லவும், வாகனத்தை நிறுத்தவும் இடம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

இதனை அந்த பகுதியில் செல்லும் பொது மக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 5, சம்பந்தப்படட அதிகாரி திரு, கார்த்திக் AE அவர்களை தொடர்புக்கொண்டு புகார் தெரிவிதித்தனர்.

புகார் வந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டு அவர் தலைமையில் கடை வெளியே தேவையற்று இடையூறாக இருந்த அனைத்து பொருட்களும் நேற்று அகற்றப்பட்டது.

மக்களனின் நலன் கருதி உடனே நடவடிக்கை எடுத்த பெருநகர சென்னை மாநகராட்சிக்கும், அதிகாரி திரு, கார்த்திக் AE அவர்களுக்கும் தமிழ்மலர் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.