காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து, அந்த பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் தற்போது ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். மேலும், என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.