இந்தியாவில் மேலும் 1,581 பேருக்கு கோவிட்; 2,741 பேர் டிஸ்சார்ஜ்!!

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,581 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,581 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,10,971 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,741 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,70,515 ஆனது. தற்போது 23,913 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.