உடுமலை: மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், அரிய வகை வனச்சூழல் மண்டலமாக உள்ளது. உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரக பகுதியில், யானை, சிறுத்தை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வசிக்கின்றன. இம்மலைப் பகுதிகளில், கடந்த ஐந்து மாதமாக போதிய மழையில்லாததால், கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.
