பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் எனில் அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 74 சதவீத மக்கள் சமூக ஊடகங்களில் உள்ளனர்; இளைஞர்களின் மனதை சமூக ஊடகங்கள் ஆக்கிரமித்துள்ளன. பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் என்றால் அதிகமாக புத்தகங்களை படிக்க வேண்டும்; வரலாறு, அரசியலை தெரிந்துகொள்ள வேண்டும். ‘வாட்ஸ் ஆப்’பில் கிசு கிசு பேசுவதை இளைஞர்கள் குறைத்து கொள்ள வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.
