சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா இன்று தொடக்கம்!

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வருடந்தோறும் மிகவும் விமரிசையாக நடைபெறும். இவ்வருட திருவிழா இன்று (9ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி சபரிமலை கோயில் நடை நேற்று (8ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்குகிறது. பங்குனி உத்திர திருவிழாவுடன் பங்குனி மாத பூஜையும் சேர்ந்து வருவதால் இன்று முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடை திறந்திருக்கும். பங்குனி மாத பூஜைகள் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 17ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் (18ம் தேதி) பம்பையில் பிரசித்தி பெற்ற ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்றுடன் 10 நாள் திருவிழா நிறைவடையும். நடை திறந்திருக்கும் 11 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.