2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன!!

கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. அப்போது முதல் 1-ம் வகுப்பு தொடங்கி 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதை தொடர்ந்து, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.