இந்தியாவில் மேலும் 30 ஆயிரம் பேருக்கு கோவிட்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. 82 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,615 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,27,23,558 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 82,988 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,18,43,446 ஆனது. தற்போது 3,70,240 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.