நுால் வெளியீட்டு விழா – (பெண் ஆளுமைகளின் உரைகள்)..

பல்துறை ஆளுமை கொண்டவா் எழுத்தாளா் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயா்த்த ”நான் இன்னும் உயிா்ப்புடன் இருக்கின்றேன்” (பெண் ஆளுமைகளின் உரைகள்) நுால் வெளியீட்டு விழா (12.02.2022) சனிக்கிழமை அன்று கொழும்பு அல்ஹிதாய வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. தலைமை இ.ஒ.கூ.தா முஸ்லிம் சேவை உதவிப் பணிப்பாளா் பாத்திமா றினுஸியா. பிரதம அதிதியாக முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா், சிங்கப்பூர் இலங்கைத் துாதுவா் பேரியல் அஷ்ரப் பும் முதற்பிரதியை நெய்னார் காப்பக தலைவர் இம்ரான் நைநாா் பெற்றுகொண்டார். மற்றும் பெண் சட்டத்தரணிகள், எழுத்தாளா்கள் மௌலாவியா கவிஞா்கள் ஊடகவியலாளா்கள் என பலரும் கலந்து கொண்டு நுாலின் பிரதிகளை பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டனா்.


தமிழ்மலர் மின்னிதழ் செய்தி இம்ரான் நைனார் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.