அரசாணை வெளியீடு!

அம்மா உணவகங்களை நிர்வகிக்க
அரசாணை வெளியீடு!

அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் அம்மா உணவகம். ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் இத்திட்டத்தால் பெரிதும் பயணடைந்து வருகின்றனர்.

சென்னை மாநகரில் 407 உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகங்களில் காலையில் ஒரு இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது. இதைபோல் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

இந்த நிலையில், அம்மா உணவகங்களை நிர்வகிக்க அறக்கட்டளை உருவாக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனி அறக்கட்டளை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

S. சுரேஷ் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.