மாநகர & புறநகர் பேருந்துகள் நிறுத்தம் – கோரிக்கை.

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் போது வண்டலூர் ரயில்வே நிலையம் மற்றும் பேருந்து நிறுத்துமிடம்
மையப் பகுதியாக விளங்குகிறது செங்கல்பட்டு மற்றும் சென்னையில் இருந்து வரும் பயணிகள் காஞ்சிபுரம் செல்வதற்கு இந்த மார்க்கத்தை பயன்படுத்த வேண்டி உள்ளதால் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள்
மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அமைச்சர் இதனை கவனத்தில் கொண்டு வண்டலூர் ரயில் நிலையத்தில் மாநகர & புறநகர் பேருந்துகள் அனைத்தும் இந்த இடத்தில் நின்று செல்ல வழிவகை செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மக்கள் நலனில் ஆர்வமுள்ள தமிழக அரசு இதை ஆவண செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள்

செய்தி
லயன் வெங்கடேசன்
செங்கல்பட்டு மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.