விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) மூன்று விளையாட்டு வீரர்களுக்கு COVID-19  தொற்று இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் ஒலிம்பிக்கில் போட்டிகள் குறித்த செய்திகளை வெளியிடும்  ஊடகங்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பிற பணியாளர்கள் உட்பட 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக இருந்ததாக ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் டோக்கியோவிற்கு வந்த பிறகு மேற்கொண்ட  கொரோனா வைரஸ் தொற்று பரொசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரும் முன்னாள் ஒலிம்பிக் தடகள வீரரான ரியு சியுங்-நிமிக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையிலும்  தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.