சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் முக்கிய அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் ஷங்சோங்கம் ஜடக் சிரு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு வணிக வளாகத்தில் இருந்து காய்கனி மற்றும் பூக்களை கொள்முதல் செய்து தங்கள் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். இங்கு வியாபாரம் மேற்கொள்ளும் அனைத்து வணிகர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்த வளாகத்தில் அமைந்துள்ள மாநகராட்சியின் மினி கிளினிக்கில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

டிரைவர்களுக்கு தடுப்பூசி

இதுநாள் வரை சுமார் 4,800 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து இங்கு வரும் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த, மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் தினசரி 300 முதல் 500 ந

Leave a Reply

Your email address will not be published.