தென்காசியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் தளர்வில்லா ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மக்கள் தேவை இல்லாமல் வெளியே வராதவாரு தமிழக அரசு பலவித நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் காவல்துறை மக்களை பாதுகாக்கும் வண்ணமாக முழு நேரமும் அணைத்து இடங்களிலும் ரோந்து பணியில் இருந்து வருகின்றனர்.

அதில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியில் காவல் நிலைய காவலர்கள் தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களையும், முக கவசம் அணியாதவர்களையும் கண்டித்தும் சிலருக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர். மேலும் மக்களுக்கு பெருந்தொற்றுனுடைய விழிப்புணர்வும் கூறி அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர்
செய்யது அலி
தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.