இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், சிறுநீரகங்களின் செயல்பாடு அதிகரித்து, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வடிகட்டுவதற்கும், உறிஞ்சுவதற்கும் சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக அதிகமாக சிறுநீரை கழிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருக்கும். இந்நிலையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், இன்சுலின் குறைவாகவும் இருக்கும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, அது சிறுநீரகங்களில் சேதத்தை ஏற்படுத்துவது முதல் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது பல மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
