மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம். இந்த நிலையில் , பராமரிப்பு பணிகள் காரணமாக மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மணிமுத்தாறு அருவி பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக அருவி பகுதிக்கு அருகில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் பொது கழிப்பறைகள் ஆகியவற்றை பராமரிக்கும் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சூழல் சுற்றுலாவுக்காக வரும் பொதுமக்கள் அனைவருக்கும் வழக்கமான நடைமுறைகளுக்கு உட்பட்டு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.