ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வேதனை!

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்;

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், எந்த வகையிலும் சனாதன தர்மம் அவமதிக்கப்படுவதை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளித்த பவன் கல்யாண், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆய்வு செய்ய, தேசிய அளவில் சனாதன தர்ம ரக்‌ஷணா வாரியம் அமைப்பதற்கான நேரம் இது என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.