அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்
தமிழாசிரியர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா?: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்
இந்திய கலாச்சார மையத்தில் தமிழ் ஆசிரியராக பணிபுரிய இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருப்பது கட்டாயமா? என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழாசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக இருக்க முடியும்?. வெளியுறவுத்துறையின் அப்பட்டமான இந்தி திணிப்பு, தமிழ் விரோத முயற்சிக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் எனவும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.