நேபாளத்தில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 14 இந்தியர்கள்

நேபாளத்தில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி 40 இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள சாலையில் சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்ட நிலையில் 14 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டதில் பலர் இந்தியர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.