உதயநிதி ஸ்டாலின்

கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்- உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.

▪️. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

▪️. இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

▪️. F4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

▪️. சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

▪️. சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும், இரவு 10.30 மணிவரை கார் பந்தய போட்டிகள் நடைபெறும்.

▪️. போக்குவரத்துக்கு எந்தவிட இடையூறும் ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.