படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
கன்னியாகுமரி கடலில் நீர் மட்டம் தாழ்வாக இருப்பதால், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு பிறகு கடலின் தன்மையை பொறுத்து சுற்றுலா படகு சேவை தொடங்க வாய்ப்பு என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது