குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2

குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி-D3 ராக்கெட். எஸ்எஸ்எல்வி-D3 ராக்கெட் மூலம் இஓஎஸ்-8 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. புவி கண்காணிப்புப் பணிக்காக துல்லியமான அதிநவீன கருவிகளுடன் இஓஎஸ்-8 செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.