பாடப் புத்தகங்களின் விலை உயர்வு.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை ₹30 முதல் ₹90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ₹30 – 40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ₹30 – 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன.

8-ம் வகுப்பு புத்தகம் ₹40 – ₹70 வரையும், 9 – 12 வகுப்பு புத்தகங்கள் ₹50 – 80 வரையும் உயர்வு. ஒருசில புத்தகங்கள் ₹90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்.

Leave a Reply

Your email address will not be published.