அக்கரகாரம் மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்

மருத்துவ நன்மைகள்

  • சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். இவர்கள் எல்லாம், சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் இட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வர, தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, தாகமெடுப்பது போன்ற பாதிப்புகள் விலகும்.
  • சிறிய அளவு அக்கரகாரத்தை சற்றே அரைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைத்து, கால் லிட்டர் அளவில் தண்ணீர் வற்றியவுடன், எடுத்து ஆற வைத்து, தினமும், அதில் சிறிதளவு வாயில் இட்டு அதக்கிக் கொண்டு, சற்று நேரம் வைத்திருந்து கொப்புளித்து உமிழவும். இதுபோன்று, தினமும் இரண்டு மூன்று முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்புளித்து வர, வாயில் உண்டான புண்கள், தொண்டைப் புண், பல் வலி மற்றும் பல் ஆடுதல் போன்ற பாதிப்புகள் விலகி விடும். மேலும், பற்களில் ஏற்படும் சொத்தை மற்றும் புழுத்தொல்லை பாதிப்பும் நீங்கிவிடும்.
  • அக்கரகார வேர்களை குழித்தைல முறைப்படி காய்ச்சி, தைலம் எடுத்து, அந்தத் தைலத்தை உடலில் தொடுதல் உணர்வுகள் இல்லாமல் இருக்கும் இடங்களில் தினசரி மெதுவாக தடவி வர, விரைவில் அந்த இடங்களில், தொடுதலின் உணர்வை உணர முடியும். உடல் தளர்வையும் போக்கும்.
  • அக்கிரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு மையாக அரைத்து, அதைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, உள் நாக்கில் தடவி வர, உள் நாக்கில் ஏற்பட்ட தொற்று வியாதி பாதிப்புகளால் ஏற்பட்ட புண்களால் தொண்டைக் கட்டி பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல், உடல் மன வேதனை அடைந்து வந்தவர்கள், அந்த பாதிப்புகள் யாவும் விரைவில் நீங்கி, அதன் பின்னர் நலமுடன் பேசவும், உணவு உண்ணவும் முடியும்.
  • திடீரென மயங்கி விழுந்து, பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வலுவாக உட்செலுத்த, உடனே மயக்கம் விலகி, பற்கள் கட்டிக் கொள்ளும் பாதிப்பு விலகி, சுய நினைவை அடைவர். காக்கா வலிப்பு வியாதியும் விலகும்.
  • மனிதர்களுக்கு நரம்புத் தளர்ச்சி பாதிப்பால் ஏற்படும் காக்கா வலிப்பு வியாதி, உடலுக்கு மிகவும் அதிக பாதிப்புகள் தருவதும், மனதுக்கு வேதனைகள் தருவதுமாக விளங்குகிறது. இந்த பாதிப்புகளைத் தடுக்க, அக்கரகாரத்துடன் துணை மருந்துகள் சேர்த்து செய்யும் சூரணம் ஒரு தீர்வாக அமையும்
  • அக்கிரகாரம், குங்குமப்பூ, ஜாதிக்காய், சந்தனம், கிராம்பு, சுக்கு, திப்பிலி மற்றும் அபின் சேர்த்து, நன்கு இடித்து, தூளாக்கி, பனங்கற்கண்டு சேர்த்து பத்திரப்படுத்தி, வைத்துக் கொண்டு, அந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, வயிற்று வியாதிகள் மற்றும் நரம்புத் தளர்ச்சி பாதிப்புகள் விலகி, உடல் வலுவாகும்.

Leave a Reply

Your email address will not be published.