விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கு மீண்டும் காட்டன் நூல் வழங்குவதாக அரசு உறுதியளித்துள்ளது. விலையில்லா வேட்டி சேலை திட்டத்தில் சேலை உற்பத்திக்கு இந்த ஆண்டு பாலியஸ்டர் நூல் வழங்க அரசு முடிவு செய்து டெண்டர் அறிவித்திருந்தது. பாலியஸ்டர் நூல் வழங்கினால் உற்பத்தி செய்வதில் பிரச்சனை ஏற்படும் என விசைத்தறியாளர்கள் ஒருநாள் உற்பத்தி நிறுத்தம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் விசைத்தறியாளர்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.