மூக்கடைப்பா

துளசி இலையை இடித்துக் கால் லிட்டர் சாறு எடுத்துக்கொள்ளவும். இதேபோல வில்வ இலையையும் இடித்துக் கால் லிட்டர் சாறு எடுத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் கலந்து அரை லிட்டர் நல்லெண் ணெயில் சேர்த்துக் கலக்கி அடுப்பில் ஏற்றவும். தண்ணீர் சுண்டி அடியில் வண்டல் படியும். அப்போது இறக்கி ஆறவிடவும். ஆறியபின் எண்ணெயை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இதை தினசரி இரண்டு மூன்று சொட்டு எடுத்து, இரு மூக்கிலும் உறிஞ்ச வேண்டும். நன்றாகத் தும்மல் வரும். இதே எண்ணெயைத் தலைக்கும் தேய்த்து வரவும். தொடர்ந்து இப்படி செய்துவந்தால் மூக்கடைப்பு, சளி அடியோடு நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published.