ரயில் மோதி 2 சிங்கங்கள் படுகாயமடைந்து

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய வழித்தடத்தில் சென்ற பயணிகள் ரயில் மோதி 2 சிங்கங்கள் படுகாயமடைந்துள்ளது. முதலில் ஒரு சிங்கம் ரயில் விபத்தில் சிக்கியதால் ஒரு மணி நேர தாமத்திற்குப் பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் வழியில், தண்டவாளத்தைக் கடந்த மற்றொரு சிங்கம் மீது மோதியுள்ளது. வனப்பகுதியை ஒட்டிய ரயில் வழித்தடத்தில் வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என விலங்கு நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.