மண்டியா: கே.ஆர்.எஸ். அணையில் கூடுதல் நீர்

மண்டியா: கே.ஆர்.எஸ். அணையில் கூடுதல் நீர் திறப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே அமைந்துள்ளது கிருஷ்ணராஜசாகர் அணை( கே.ஆர்.எஸ்.). இந்த அணை காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. இந்த அணை தான் கர்நாடகா, தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்குகிறது.கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், அணை நிரம்பவில்லை. நடப்பாண்டு ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published.