திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய தகவல்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் SEED (Scheme for Economic Empowerment DNTs) திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் SEED (Scheme for Economic Empowerment DNTs) திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் பின்வரும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை
- கல்விக்கான அதிகாரமளித்தல் (சீர்மரபினர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி அளித்தல்)
- சுகாதாரம் (சீர்மரபினர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல்).
- வாழ்வாதாரங்களை எளிதாக்குதல் (DNT/NT/SNT சமூக சிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்குதல்)
- நிலம் மற்றும் வீடு (சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல்)
மேற்கண்ட திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் மைய அரசின் இணையதளமான www.dwbdncdosjerov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரகம் முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருகதர்ப்பகராஜ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.