தியாகராயர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநகராட்சியின் தானியங்கி பல்லடுக்கு வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடப்பட்டது. மக்கள் அதிகளவில் பயன்படுத்தாததால் பராமரிப்பு பொருட்செலவு அதிகரித்ததன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. புதிய டெண்டர் விடும் வரை வாகன நிறுத்தம் மூடப்பட்டு இருக்கும் எனவும், பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கும் வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
