புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே குரும்பட்டியில் நிலத் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். கடந்த 23-ம் தேதி பாஸ்கர் என்பவர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த இளங்கோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளங்கோவை வெட்டிக் கொன்றது தொடர்பாக இளைஞர் பாஸ்கரை கைது செய்து போலீஸ் சிறையில் அடைத்தது.

Leave a Reply

Your email address will not be published.