கனமழை காரணமாக ஊட்டி படகு இல்ல சாலையில், மலை ரயில் பாலத்திற்கு அடியில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கி கொண்ட காரில் இருந்த சுற்றுலா பயணிகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.குமரி கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கன மழை பெய்து வருகிறது.
