முகச்சருமத்தின் பிரச்சனைகளைப் போக்கும் கொய்யா இலைகள்!

1. கோடைக் காலங்களில் வெளியே செல்லும்போது முகத்தின் நிறம் கருமையாக மாறும். மேலும் முகத்தில் கரும்புள்ளிகளும் தோன்றும். அதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு கொய்யா இலைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்கவிடுங்கள். பிறகு அந்த நீரை காட்டன் துணியால் நனைத்து முகத்தில் அப்ளே செய்துக்கொள்ளுங்கள். ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை கழுவினால், சருமத்தின் கருமை நீங்கும்.

2.  Histamine என்ற பொருளை உடல் வெளியேற்றும்போது, வீக்கம், அழற்சி ஆகியவை அறிகுறிகளாகத் தோன்றும். கொய்யா இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகையால், இவை Histamine உற்பத்தியைத் தடுக்கின்றன. டெர்மடிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யா இலைகளை பசும்பாலுடன் சேர்த்து அரைத்து அப்ளை செய்து வந்தால், மிக வேகமாக டெர்மடிடிஸ் பிரச்சினையைத் தீர்க்கலாம்.

3.  முகத்தில் பருக்கள் உண்டாவதற்கான பேக்டிரியாக்களை, கொய்யா இலைகளின் பேக்டிரியா அழிக்கிறது. ஆகையால், கொய்யா இலைகளை அரைத்து அதன் சாரை முகத்தில் தடவினால் முகப்பருக்கள் நீங்கும்.

4.  சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், துளைகளை நீக்கக் கொய்யா இலை நீர் உதவுகிறது. இது இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

5.  மேலும் கொய்யா இலைகள் மிருதுவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெற உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.