ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது : உயர்நீதிமன்றம்

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மேல்மலையனூர், பழைய மரக்காணம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா மே 18-ம் தேதி நடைபெறுகிறது. மே 18-ம் தேதி நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது என்று இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.