தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில்
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் இன்று முதல் மே12 வரை 144 தடை உத்தரவு
பாஞ்சாலங்குறிச்சியில் இன்று மாலை 6 மணி முதல் மே 12 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீரசக்கதேவி கோயில் திருவிழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு 144 தடை உத்தரவு போடப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாஞ்சாலங்குறிச்சியில் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வீரசக்கதேவி கோயில் திருவிழா நடைபெறுகிறது.