உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

126-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ல் நீலகிரி மாவட்டத்துக்கு

நீலகிரியில் மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ல் நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய மே 18ம் தேதி பணி நாள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடைகாலம் சீசன் ஆகும். இந்த மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்கள் சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா செல்வது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.