தற்கொலை முயற்சி: திடீர் பரபரப்பு

கரூர் அருகே அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சி: திடீர் பரபரப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்குள் நீதிமன்ற ஊழியர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் மருத்துவம் மற்றும் தற்செயல் விடுப்பு வழங்காமல் நிராகரிக்கப்பட்டதாகவும் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் ஊழியர் நடராஜன் குறிப்பிட்டிருந்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானதால் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். முன்னதாக தற்கொலைக்கு முயன்ற அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.