நல்லன எல்லாம் தரும் நாராயண மந்திரம்

அன்னை கனகதுர்க்கை என்றதும் ஆந்திர மாநில விஜயவாடாதான் நினைவுக்கு வரும். ஆனால் சென்னையில் மிகவும் பிரசித்திப் பெற்ற கனக துர்க்கை அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அழகின் மொத்த உருவமாக கருணைக் கண்களுடன் மக்களுக்கு அருள்பாலிக்கிறாள். எட்டரை அடி உயர கம்பீரம், பத்துக் கரங்களின் அரவணைக்கும் பரிவு, நேர் பார்வையின் துயரம் போக்கும் ஆறுதல் மட்டுமில்லாமல் அனைத்துச் செல்வங்களையும் அள்ளி வழங்க ஆர்வத்துடன் காத்திருக்கிறாள்.

தெற்கு நோக்கிய ராஜகோபுர வாசல் வழியாக உள்ளே சென்றால், நேர் எதிரே ஐயப்பன் சந்நதியை தரிசிக்கலாம். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் ஐயப்பன் கோயிலுக்காகத்தான் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இறை உத்தரவு வேறுமாதிரியாக வந்ததால், அம்பிகை மூலவராக இங்கு வீற்றிருக்கிறாள். அதன்படி இங்கே பிரதான தெய்வமாக கனகதுர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.

கோயிலை சம்பிரதாயமாக வலம் வரும்போது இடது பக்கத்தில் வலம்புரி ஜோதிவிநாயகர் அருட்காட்சி வழங்குகிறார். அவருக்கு அருகே, சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி. அவருக்குப் பக்கத்தில் புவனேஸ்வரி. அருகிலேயே மகாலட்சுமி, தனி சந்நதியில் திருப்பதி பத்மாவதியை நினைவுபடுத்துவதுபோல கொலுவீற்றிருக்கிறாள்.

வடக்கு பார்த்த சந்நதியில் சரஸ்வதி தேவி. பள்ளி, கல்லூரி துவங்கும் சமயத்திலும், பரீட்சை காலங்களிலும் இந்த சந்நதி நூற்றுக்கணக்கான மாணவர்களால் சூழப்பெறும். அவர்கள் தேர்விற்கு பயன்படுத்தப்படும் பேனாவினை கலைமகள் முன்னால் சமர்ப்பித்து, ஆசி பெற்று எடுத்துச் செல்கிறார்கள். ஏழை மாணவர்களுக்கு கோயில் நிர்வாகமே தம் செலவில் அப்பொருட்களை சரஸ்வதியின் ஆசியுடன் வழங்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.