ஓட்டு பதிவு பணி அலுவலர்கள் தீவிரம்

வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக பூத் வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிப்பு

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்காளர் பட்டியல் அனுப்புவதற்காக அலுவலர்கள் மூலம் பூத்வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்றன.
நாட்டின் 18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதியானது 7 கட்டங்களாக நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் தமிழகத்தில் இருந்து வரும் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம்தேதி தேர்தல் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆணையத்தின் உத்தரவு படி 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.