இன்று மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு

பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி வைகோ தொடர்ந்த வழக்கு இன்று மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு

பம்பரம் சின்னம் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் பட்டியலில் உள்ளதா, இல்லை பொதுசின்னங்கள் பட்டியலில் உள்ளதா? என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி;

ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட்டால் மட்டுமே கட்சிகள் கேட்கும் சின்னங்களை ஒதுக்க முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்;

அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டுமே ஒதுக்குவார் எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம்
இன்று மாலைக்குள் சின்னங்கள் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு;

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி மதிமுக பொதுசெயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு இன்று மதியம் 3 மணிக்கு ஒத்திவைப்பு

Leave a Reply

Your email address will not be published.