ஒரு தன்னம்பிக்கை இளைஞரின் கதை

டவுன் சிண்ட்ரோம் எனும் மனநல குறைபாடு மீதான கற்பிதங்களை ஒழிப்பதுதான், இந்தாண்டு சர்வதேச டவுன் சிண்ட்ரோம் தினத்தின் கருப்பொருளாக உள்ளது.

டவுன் சிண்ட்ரோம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள் குறித்தும் அவர்கள் எப்படி இருப்பார்கள் அல்லது அவர்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள எண்ணங்களை எதித்துப் போராடுவதே இந்நாளின் இலக்கு. டவுன் சிண்ட்ரோமுடன் வாழ்ந்துவரும் இந்தோனேசியாவை சேர்ந்த மோர்கன் மேஸ் தன் வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.

டவுன் சிண்ட்ரோம் இண்டர்நேஷனல் எனும் சர்வதேச அமைப்பின் தூதராக மோர்கன் உள்ளார். இந்த அமைப்பில், உலகம் முழுவதிலும் இருந்து தங்கள் நலன்களுக்காக தாங்களே குரல் கொடுக்கும் குழுவிலும் மோர்கன் உள்ளார்.

”என் பெயர் மோர்கன் மேஸ், எனக்கு 25 வயதாகிறது. இந்தோனேசியாவின் ஜாகர்டாவில் என் அம்மாவுடன் வசித்துவருகிறேன்.

”YAPESDI (இந்தோனேசியன் டவுன் சிண்ட்ரோம் கேர் ஃபவுண்டேசன்) எனும் அமைப்பால் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட இளம் வயதினருக்கு நடத்தப்படும் வார ஆன்லைன் வகுப்புகளுக்கு வகுப்பு உதவியாளராக நான் பணிபுரிகிறேன்.” இந்த அமைப்பு டவுண் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக இயங்கிவரும் லாப நோக்கற்ற அமைப்பாகும்.

இந்த அமைப்பின் பணியாளர்கள் கூட்டத்தில், டவுண் சிண்ட்ரோம் குறைபாட்டல் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தன்னை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் மோர்கன்.

ஆனால், அவருக்கு சமையல் மீதும் ஆர்வம் இருக்கிறது.

”வாரத்திற்கு இரு நாட்கள் நான் உணவகத்தில் பணிபுரிகிறேண். உணவகத்தில் பணிபுரிவது என்னுடைய கனவு. ஏனென்றால், எனக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும்.

”ஒருநாள் நான் சொந்தமாக உணவகம் ஆரம்பிக்க விரும்புகிறேன். என்னுடைய சம்பளம் மற்றும் மற்ற வருமானங்களை சேமித்து என்னுடைய கனவை நிறைவேற்றுவேன்.”

Leave a Reply

Your email address will not be published.