அன்புமணி சந்திக்க முடிவு

பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.
நாட்டின் நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உள்ளது. மக்களுக்கு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உள்ளது. அதைப் பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published.